தென்மேற்கு பருவமழை காரணமாக டெல்லி, ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் தொடர் கனமழை பெய்வதால் பல ஏரிகள், ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு சாலைகள் முழுவதிலும் சூழ்ந்துள்ளது. அதனால், பல வாகனங்கள் வரிசைக்கட்டி நின்று போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்நிலையில், இப்படித் தொடர் மழை பெய்து வருவதால் டெல்லி தலைமைச் செயலகத்திலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. செங்கோட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும், சாலைகளிலும் வெள்ளநீர் இருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் மழையால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வீட்டிலிருந்து பணியாற்ற அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- Advertisement -