இந்தியாவில் தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாகக் கேரளா உட்படப் பல வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதனால், ஹரியானா போன்ற வட மாநிலங்களில் சாலைகளில் கடல் போல் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் , இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று (ஜூலை 9) 153 மிமீ வரை கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. கடந்த 1958 ஜூலை 21ல் பெய்த 266 மிமீ மழைதான் டெல்லியில் அதிகபட்சமாக மழைப் பதிவாக இருந்தது. மேலும், இங்கு நிவாரண பணியில் ஈடுபடுவதற்காக, பல அரசு அதிகாரிகளுக்கு ஞாயிறு விடுமுறை ரத்து செய்யப்பட்டது. நகரிலுள்ள மழைநீர் வெளியேற வழியில்லாமல் டெல்லி முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது எனத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -