அரபிக் கடலில் உருவான தென்மேற்கு பருவமழை காரணமாகப் பல வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாகக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 34 பேர் உயிரிழந்துள்ளதாக மக்களை மழையிலிருந்து மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
மேலும், இந்த மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சற்று முன் அறிவித்துள்ளார்
- Advertisement -