கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்போவதாகத் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சில தினங்களுக்கு முன் பேட்டியளித்தார். இதையொட்டி, தமிழகத்தில் முதல்வர் உட்படப் பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து ஆலோசனை நடத்த அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அதில், அவர் ” தமிழ்நாடு எங்களது சகோதர மாநிலம். அவர்களுடன் எந்த விவகாரத்திலும் சண்டையிட எங்களுக்கு விருப்பம் கிடையாது. தமிழர்கள் இங்கு வேலை செய்கின்றனர். கன்னடர்கள் அங்கு வேலை செய்கின்றனர். உரியச் சந்தர்ப்பம் கிடைக்கும் போது பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்க வேண்டும்” என்றார்.
- Advertisement -