மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் இரு சமூகத்தினர்க்கிடையே பெரும் மோதல் ஏற்பட்டதை அடுத்து, மணிப்பூர் மாநிலமே இதன் காரணமாக வன்முறையில் ஈடுபட்டது. இதனால், 100க்கும் மேற்பட்டோர் இந்த வன்முறையால் பலியாகினர். அதைப்போல், பலர் தங்களது உடைமைகளும், வீடுகளும் இழந்தனர். இந்நிலையில், ஒன்றிய அரசு இந்த வன்முறையைத் தடுக்க ராணுவப்படையை அங்கு அனுப்பியது. ஆனாலும், அங்கு முழுதாக வனத்துறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், தற்போது மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 16 நாட்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் வன்முறை பயங்கரமாக வெடித்தது. அதிலும், குறிப்பாக கங்போக்பி மாவட்டத்தில் நேற்று மட்டும் இந்த வன்முறையால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு கூடிய 100க்கும் மேற்பட்டோர் மீது ராணுவத்தினர் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசினர். இந்நிலையில், இதுவரை இந்த வன்முறை காரணமாக 133 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -