பொதுவாகத் தலையில் ஏற்படும் பொடுகு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடிய ஒன்று தான். இந்த பொடுகு பிரச்சனையால் முடி உதிர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளை அனைவரும் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், நம் வீட்டுச் சமையல் அறையில் இருக்கும் பொருள்களும்கூட இந்த பொடுகுப் பிரச்சனைக்கு நல்ல தீர்வு தரக்கூடியவை. அது, ஆரஞ்சு தோல்களை நன்கு அரைத்து, சிறிது எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்து தலையில் தேய்த்து, 30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர வேண்டும்.
- Advertisement -