மணிப்பூரில் கடந்த மாதத்தில் இரு இன சமூகத்தினர்க்கிடையே வெடித்த மோதலால் இம்மாநிலமே பயங்கர வன்முறை மேகம் சூழ்ந்துள்ளது . இதைக் கட்டுப்படுத்த ராணுவப்படையை அனுப்பியும் பலனளிக்காததால், 100க்கும் மேற்பட்டோர் இந்த கலவரத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த கலவரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் இன்று (ஜூன் 24) பிற்பகல் 3 மணியளவில் நடக்கவுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இக்கூட்டத்தில் அனைத்து கட்சிகளிடமும் கலவரத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து கருத்துகள் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த கூட்டத்தில் பங்கேற்கக் காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. ஏனென்றால், மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டுமெனில் டில்லியில் கூட்டத்தை நடத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், பிரமர் மோடி நாட்டில் இல்லாத நேரத்தில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் எனக் காங்கிரஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
- Advertisement -