ஆந்திரா மாநிலத்திலுள்ள கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் அனைவரும் ஏழுமலையான் கோயிலுக்குச் செல்வதற்காக அலிபிரி மலைப்பாதையில் நடந்து சென்றனர். அப்போது, அந்த குடும்பத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவனை, எதிர்பாராத விதமாக வனப்பகுதியிலிருந்து வந்த சிறுத்தை தூக்கிச் சென்றுள்ளது.
இதைக் கண்ட அங்குள்ள மக்கள் பயங்கரமாகக் கூச்சலிட்டதால் சுமார் 150 மீ தூரத்தில் அந்த சிறுவனைப் போட்டு விட்டு சிறுத்தை தப்பிச் சென்றது. இதையடுத்து, வேகமாக வந்த காவல்துறை படுகாயம் அடைந்த அச்சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது
- Advertisement -