பொதுவாகச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பிஸ்கெட் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி நாம் சாப்பிடும் பிஸ்கெட்டில் உடலுக்குப் பல தீங்குகள் நடைபெறுகிறது. அதிலும், குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்துப் பழக்கப்படுத்துவது மிகவும் தவறு. ஏனென்றால், நாம் பிஸ்கெட் சாப்பிட்ட பிறகு பெரும்பாலானோர் வாய் கொப்பளிப்பது இல்லை. இதனால் பல் சொத்தை உருவாகும்.
மேலும், இந்த பிஸ்கெட்டில் நீர்ச்சத்தை அதிகம் உறிஞ்சும் தன்மை இருப்பதால் எளிதில் மலச்சிக்கல் உண்டாகும். வாரம் ஓரிரு முறை பிஸ்கெட் சாப்பிடுவது தவறு இல்லை. அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது ஆரோக்கியமானது அல்ல என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
- Advertisement -