பொதுவாக யானைகள் காட்டிலிருந்து வெளியாகி ஊருக்குச் செல்லும் போது அல்லது தண்ணீர் தேவைக்காக வரும் போது ரயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு உயிரிழப்பதாகப் பல செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இதற்குத் தீர்வாகக் கேரளா அரசு, யானைகள் ரயிலில் அடிப்பட்டு இறப்பதைத் தடுக்க தென்னிந்தியாவில் யானைகளுக்காகக் கட்டப்படும் முதல் சுரங்க வழி அமைத்து வருகிறது.
இந்த சுரங்கப்பாதை 60 அடி அகலம், 20 அடி உயரத்துடன் 7.5 கோடி செலவில் கேரளாவின் வாளையார் அருகே கட்டப்பட்டு வருகிறது; பாலக்காடு ரயில்வே கோட்டம் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பரில் இப்பணிகள் தொடங்கியது. தற்போது, கட்டப்பட்டு வரும் இந்த சுரங்கப்பாதை இறுதிக்கட்டத்தை எட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது
- Advertisement -