அசாமில் உள்ள கவுஹாத்தி விலங்குகள் சரணாயலத்தில் பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சரணாலயத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்த சரணாலயத்தில் யானைகளும் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த கவுஹாத்தி விலங்குகள் சரணாயலத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் நடந்து வந்து, அங்குள்ள இனிப்பு கடையிலிருந்து இனிப்புகளைச் சாப்பிட்டுப் பசியாற்றிய யானையின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த யானை பசி தீர்ந்தபின் மீண்டும் சரணாலயத்திற்கே திரும்பியுள்ளது. ஆகவே, இந்த யானையால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -