இன்று (ஜூன் 2) பிறந்த நாள் காணும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பல தலைவர்கள் தங்களது வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடியும் தனது வாழ்த்தைக் கடிதம் மூலம் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ”பிரதமரிடமிருந்து அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெறுவது என் அதிர்ஷ்டம். எதிர்கால இந்தியாவுக்கான தொலைநோக்கு பாதையில், ‘தேசத்திற்கு’ சேவை செய்வதற்கு தங்களின் ஊக்கத்தைப் பெறுவதை ஆசீர்வாதமாக உணர்கிறேன். தங்களின் உழைப்பே எங்களுக்கு உத்வேகம்” என மோடியின் வாழ்த்தைக் குறிப்பிட்டு நெகிழ்ச்சியாக ட்விட் செய்துள்ளார் தமிழிசை.
- Advertisement -