பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சத்யேந்திர ஜெயின் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், இன்று (மே 25) சிறையில் உள்ள கழிவறைக்குச் சென்றபோது எதிர்பாராதா விதமாக மயங்கி விழுந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த சிறை நிர்வாகம் இவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதி அளித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் விசாரித்து போது, சத்யேந்திர ஜெயின் கழிவறையில் மயங்கியதில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அதற்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருவதாக சற்றுமுன் சிறை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது
- Advertisement -