பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் காரில் சென்ற போது அங்கு ஏற்பட்ட மும்பை நகர போக்குவரத்து நெரிசலால் அவ்வழியாக வந்த பைக்கில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். ஏனென்றால், விரைவாக ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு செல்வதற்காக இந்த முறையில் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாந்து.
அதேமாதிரி, நடிகை அனுஷ்கா சர்மா அவர்கள் சாலை தடுப்புகளை கடக்க காரில் இருந்து இறங்கி அவ்வழியாக சென்ற ஒருவரின் பைக்கில் சென்ற புகைப்படமும் சமூகவலைத் தளத்தில் வைரலானது. இந்நிலையில், இந்த இரு பிரபலங்களும் ஹெல்மெட் அணியாமல் பயணித்த அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காததை குறித்து கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற இரு பிரபலங்கள் மீதும் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என மும்பை போலீஸ் ட்வீட் செய்துள்ளது.