- Advertisement -
டீ,காபி அளவுக்கு அதிகமாக அடிக்கடிக் குடிப்பவர்களுக்கு செரிமான மண்டலம் பாதிக்கப்படும்,அஜீரணக் கோளாறு, வாயுப் பிரச்சனை ஏற்படும், நரம்பு மண்டலப் பிரச்சனைகளும் வரும், மூளை மந்தமாகும், பசியே எடுக்காது. தாமதமாகச் சாப்பிட நேரிடும்.
அதைபோல், காபியில் உள்ள காஃபின் நம் ரத்தத்தில் கலந்துவிட்டால், புகை, சிகரெட், மது போல், டீ, காபிக்கு அடிமையாகி, அந்தந்த நேரத்துக்கு குடிக்கச் சொல்லித் தூண்டும். இதனால் அதிகமாகக் குடிக்கும்போது, திடீர் புத்துணர்ச்சியால் உடலில் குளுக்கோஸ் அதிகரித்து மேலும் பிரச்சனை வரலாம். மேலும், இது உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு தலைசுற்றல் வரும் வாய்ப்புக்கள் அதிகம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
- Advertisement -