மணிப்பூரில் வசித்து வரும் மெய்தேயி சமூகம் தங்களுக்கு எஸ்.டி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில், இவர்களுக்கு இந்த அந்தஸ்து அளிக்கப்படுவதை எதிர்க்கிறது அங்கு வாழும் பல பழங்குடியின சமூகங்களை உள்ளடக்கிய ஒரு குக்கி அமைப்பு. இதனால் அங்கு கடந்த சில நாட்களாக அங்கு இருதரப்பினருக்கும் பயங்கர வன்முறை வெடித்தது.
இதற்காக இந்திய அரசு அம்மாநிலத்தில் ராணுவத்தை இறக்கி இந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தது. ஆனால் அப்போது இந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர முடியாததால், தற்போது மத்திய அரசு வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், சட்ட ஒழுங்கை நிலைநாட்ட இந்திய அரசின் அரசமைப்பு சட்டப்பிரிவு 355-ஐ அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டப்பிரிவு மூலமாக உள்நாட்டு வன்முறைகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் வழங்குவது ஆகும்.