இந்தியாவில் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் மணிப்பூரில் வசித்து வரும் மெய்டேய் இன மக்கள் தங்களுக்கு எஸ்.டி என்ற சாதி பிரிவில் இணைக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில், பல பழங்குடியின மக்களின் அமைப்பான குக்கி அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இருதரப்பினருக்கும் பயங்கர வன்முறை வெடித்தது. இதை கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசு 355-சட்டப்பிரிவு அமல்படுத்தியது.
இந்நிலையில், இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தைத் தொடர்ந்து மணிப்பூரில் கலவரம் வெடித்ததின் எதிரொலியாக தற்போது மேகாலயாவிலும் இந்த இருதரப்பினருக்கும் மிக பெரிய மோதல் நடந்தது. இந்த கலவரம் மேகலையவில் உள்ள மிசோ மோர்டன் என்ற பள்ளிக்கு அருகிலுள்ள நோங்ரிம் ஹில்ஸில் என்ற இடத்தில் நடந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை 16 பேர் கைது செய்யப்பட்டு, 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.