ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் இன்று (மே 5) வெள்ளிக்கிழமை பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியது. மேலும் இதில் ஒரு அதிகாரி உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். மேலும், இந்த
ரஜோரி செக்டாரில் உள்ள கண்டி வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக குறிப்பிட்ட தகவலின் பேரில், வெள்ளிக்கிழமை காலை 7:30 மணியளவில் கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டது.
இதனால் ராணுவ துறையினர் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், ஒரு குகையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததாக ஒரு தேடுதல் குழு தொடர்பை ஏற்படுத்தியதாக இந்திய ராணுவ அறிக்கை தெரிவித்துள்ளது. அப்போது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். இப்படி இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்து வருவதால் இணையதள சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது என இந்திய அரசு தகவல் வெளியிட்டு உள்ளது.