ரஷ்யா அதிபர் புதின் கடந்த ஆண்டு முதல் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இதனால் ரஷ்யாவில் கடும் பொருளாதார கட்டுப்பாட்டை மற்ற அநேக நாடுகள் விதித்தது. இருந்தாலும் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது போர் புரிந்து வருகிறது. இதன் காரணமாக உக்ரைனுக்கு வளமிக்க நாடுகள் உதவி புரிந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா நாடு உக்ரைனுக்கு பல நெருக்கடியான நேரத்திலும் உதவி செய்து வருகிறது.
இந்நிலையில், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை கொலை செய்ய அதிபர் மாளிகையை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் சென்று தாக்குதல் நடத்தியதாக ரஷியா அரசு உக்ரைன் மீது பயங்கர குற்றசாட்டை அளித்துள்ளது. இந்த உக்ரைன் ட்ரோன்களை, ரஷ்யாவில் உள்ள வான்வழி பாதுகாப்பு அம்சம் மூலம் வந்த 2 ட்ரோன்களை இடைமறித்து அழிக்கப்பட்டதாக ரஷ்யா சற்றுமுன் தெரிவித்துள்ளது. இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.