பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அதில் இவர் சினிமா , அரசியல் குறித்து தனது கருத்தை வெளிப்படையாக பகிர்வார். இதனால் இவர் சில சர்ச்சைகளிலும் சிக்கினார். ஆனாலும் இவர் தனது கருத்தை பகிராமல் இருந்ததில்லை. இவர் தற்போது பாலின அடையாளம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில் அவர்” ஒரு நபரை நாம் எப்போதும் ஆண், பெண், திருநங்கை என்று பாலின அடிப்படையில் பார்க்கக்கூடாது”. இந்த வளர்ந்த உலகில் தற்போதெல்லாம் பெண் நடிகைகள் அல்லது பெண் இயக்குநர்கள் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. மாறாக நடிகர்கள், இயக்குநர்கள் என்ற வார்த்தைகளையே பயன்படுத்தியே வருவதாக கூறினார். மேலும், அவர் ”நான் பெண் என்ற அடையாளத்தை கொண்டிருந்தால் இந்த திரையுலகத்தில் எனக்கான இடத்தை உருவாகியிருக்க முடியாது. எனவே நீங்கள் உங்களை அதிலிருந்து விடுவித்து கொள்ளுங்கள் என ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறார்.