- Advertisement -
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.வயநாடு எம்.பி.யாக இருந்த அவரது தகுதி நீக்கம், அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நாளான மார்ச் 23 முதல் அமலுக்கு வரும் என்று செயலகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
“எல்லா திருடர்களுக்கும் மோடி என்று எப்படிப் பொதுப்பெயரை வைத்திருக்கிறார்கள்?” என்று பாஜக எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி அளித்த புகாரின் பேரில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வியாழக்கிழமை இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
- Advertisement -