Friday, April 26, 2024 3:18 pm

ரித்விகா மற்றும் கருணாஸ் நடிப்பில் உருவான ‘ஆதார்’ படத்தின் முழு விமர்சனம் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அடையாளம். இந்த ஒரு வார்த்தையைச் சொல்வதென்றால், நமது ஒட்டுமொத்த இனத்தையும், பணக்காரர் முதல் மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள் வரை இயக்குவதாகச் சொல்லலாம். அடையாளத்திற்கான போராட்டமே கருணாஸ் நடிக்கும் ஆதார் படத்தின் கதைக்களத்தை உருவாக்குகிறது, இது சமூக ரீதியாக பொருத்தமான இந்த கருப்பொருளை ஆராய்வதாக உறுதியளிக்கிறது.

அடையாளத்தின் கருப்பொருள் உலகளாவியதாக இருந்தாலும், இந்த படத்தின் தலைப்பு குறிப்பிட்ட தன்மையைப் பற்றி பேசுகிறது. இந்தியாவின் ஆதார் திட்டத்தில் (யுஐடிஏஐ) ஆதார் ஒரு அரசியல் வர்ணனை அல்ல என்பதை இயக்குனர் ராம்நாத் பழனிகுமார் உடனடியாக தெளிவுபடுத்துகிறார்.

“படம் அடையாளத்துடன் தொடர்புடையது என்பதால்தான் தலைப்பைப் பயன்படுத்தினோம். தன் அடையாளத்தை இழக்கும் ஒருவரின் சிந்தனையைத் தூண்டும் கதை இது. அரசியல் மற்றும் போலீஸ் அதிகாரத்தின் பொருளாதாரத்தால் ஒரு சாதாரண மனிதன் எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பதை ஆராய முயற்சிக்கும் பல அடுக்கு கதை இது.

கட்டிடத் தொழிலாளியான பச்சைமுத்து (கருணாஸ்)வின் மனைவி துளசிக்கு (ரித்விகா) மருத்துவமனையில் குழந்தைப் பிறக்கிறது. அவரும் அவருக்குத் துணையாக இருந்த சரோஜா(இனியா)வும் திடீரென காணாமல் போகிறார்கள். இதில் சரோஜாவின் சடலம் மருத்துவமனைக்கு வெளியில் கிடைக்கிறது. தனது மனைவியை காணாமல் தவிக்கும் பச்சை முத்து, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். விசாரிக்கும் அவர்கள், ஒரு பகீர் தகவலைச் சொல்கிறார்கள். நம்ப மறுக்கிறார் பச்சைமுத்து. அவர் மனைவி எங்கு சென்றார், என்ன ஆனார் என்பதுதான் படம்.

பணத்துக்கும் அதிகாரத்துக்கும் இடையில் சாதாரண மனிதனின் நீதி எப்படி தள்ளாடுகிறது என்பதையும் கார்ப்பரேட்களின் சூழ்ச்சியில், எளிய மனிதர்களின் உயிர்கள் எப்போதும் விளையாட்டுக் கருவிதான் என்பதையும் எந்த மிகையுமின்றி யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார், இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார். ஒரு க்ரைம் திரில்லர் கதையை, வணிக மசாலா இல்லாமல் சமரசமின்றி படமாக்கி இருப்பதற்காகப் பாராட்டலாம் அவரை.

இயக்குநரின் அழுத்தமான முயற்சிக்கு, கதையை மீறாத, மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும் ஸ்ரீகாந்த் தேவாவின் உறுத்தலில்லாத பின்னணி இசையும் ஆர்.ராமரின் எடிட்டிங்கும் பிரம்மாதமாக உதவி இருக்கிறது.

கட்டிடத் தொழிலாளியாக வரும் கருணாஸுக்கு இது முக்கியமான படம். கிழிந்த பனியனும் அழுக்கு லுங்கியுமான அவருடைய பரிதாப தோற்றம் வழக்கமான வறுமை தொழிலாளியை, அப்படியே காட்டுகிறது. மனைவியை காணாமல் கதறும்போதும், குழந்தையை கையில் வைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் தவிக்கும்போதும், அதிகாரத்தின் மிரட்டலில் ஏதும்செய்ய இயலாதவராகப் பரிதவித்து நிற்கும்போதும் ஒரு படி உயர்ந்திருக்கிறார் நடிப்பில்.

கர்ப்பிணியான ரித்விகாவுக்கு அதிக வேலை இல்லை என்றாலும் அவரைச் சுற்றிதான் கதை என்பதால் கிடைத்த கேப்-பில் ஸ்கோர் செய்கிறார். முதலில் கருணாஸுடன் மோதலில் ஈடுபட்டு, பிறகு பரிதாபத்தால் உதவும் இனியா பாத்திரம், முதல் பாதி சஸ்பென்ஸுக்கு கை கொடுக்கிறது. திருட்டுத் தொழில் செய்தாலும் அவருக்குள் இருக்கும் ஈரத்தை காட்டும் நேர்மையில் அவர் கேரக்டர் நிமிர்ந்து நிற்கிறது.

தங்கள் அதிகாரத்தை எப்படியும் வளைக்கும் உதவி காவல் ஆணையர் உமா ரியாஸ், கொடூரமான ஆய்வாளர், ‘பாகுபலி’ பிரபாகர் ஆகியோர் அந்தந்த பாத்திரத்தில் ஒன்றி இருக்கிறார்கள். சோகமான நடை, மெதுவான பேச்சு என வயதான காவலரை கண்முன் நிறுத்துகிறார், அருண் பாண்டியன். தவறுக்கு உடந்தையாக இருந்துவிட்டதற்காக அவர் எடுக்கும் முடிவு அதிர்ச்சிதான்.

பணிவான மேஸ்திரி பி.எல்.தேனப்பன், குடிகார ஆட்டோ ஓட்டுநர் திலீபன் ஆகியோரும் தங்கள் பாத்திரங்களைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

இரண்டு மணி நேரப் படம் என்றாலும் மெதுவாகத்தான் நகர்த்திச் செல்கிறது திரைக்கதை. படத்துக்குப் பலமான சஸ்பென்சை இன்னும் கொஞ்சம் புரியும்படி சொல்லி இருக்கலாம் என்பது போன்ற சிற்சில குறைகள் இருந்தாலும் அது ‘ஆதாரு’க்கான திருஷ்டிப் பொட்டாகவே இருக்கிறது.

கருணாஸ் இயக்கிய அம்பாசமுத்திரம் அம்பானி படத்தை இயக்கிய ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் உருவாகும் படம் இது. வெண்ணிலா கிரியேஷன்ஸ் பேனரில் பி சசீ குமார் தயாரிக்கிறார். இப்படத்தில் கருணாஸ் தவிர, ரித்விகா, இனியா, அருண் பாண்டியன், உமா ரியாஸ் கான், திலீபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் அதன் தலைப்பிலேயே அடையாளம் பற்றிய கருத்தை ஆராயும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி சென்னையில் படமாக்கினார். ஆர் ராமர் படத்தொகுப்புடன் கூடிய இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்