தமிழ் சினிமாவில் அழகிய நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி. இவர்கள் இருவரும் ஷாலினி அலைபாயுதே படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே காதலிக்க தொடங்கியிருந்தாலும் சேர்ந்து நடித்த அமர்க்களம் படம் முடிவடைந்து ஒன்று சேர்ந்தார்கள்.
இவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சில சுவாரஸ்ய தகவல்களை ஷாலினியின் தங்கையும் நடிகையுமான ஷாமிலி கூறினார். அஜித் எப்பவும் ஷாலினிக்கு எதையும் முடிவு எடுக்கும் உரிமையை சுதந்திரமாக விட்டு விடுவாராம். யாரும் யாரையும் முந்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்கள் இருவருக்கும் கிடையாதாம்.
மேலும் அஜித் எப்பவுமே வீட்டில் இருக்கும் போது எதையாவது சுத்தம் பண்ணிக் கொண்டு இருப்பாராம். பிக்டோரியலா இருக்கவேண்டும் என நினைப்பாராம். மேலும் அவர்கள் இருவரும் காதலிக்கும் போது அஜித் பூ வாங்கி ஷாமிலியிடம் கொடுத்து ஷாலினியிடம் கொடுக்க சொல்வாராம்.
இவரும் வீட்டில் யாருக்கும் தெரியாமல் மறைத்துக் கொண்டு ஷாலினியிடம் போய் கொடுப்பாராம். அவர்களுக்குள்ளாவே காதலை சொன்னார்கள். நான் சிலசமயம் இவர்களுக்கு இடைப்பட்ட நபராக இருந்து செய்ய வேண்டிய வேலையெல்லாம் செய்வேன் என்று ஒரு பேட்டியில் கூறினார்.