கவுன் பனேகா க்ரோர்பதி 14 சோனி டிவியில் திரையிடப்பட்டது மற்றும் அவரது வினாடி வினா நிகழ்ச்சியின் மூலம் அமிதாப் பச்சனை மீண்டும் சிறிய திரையில் பார்க்க ரசிகர்கள் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர். KBC 14 இன் முதல் எபிசோட் சுதந்திர தின சிறப்பு எபிசோட் என்பதால் இந்தியாவின் ஹீரோக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
1994-ம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹோலந்த் நடிப்பில் வெளியாகி உலகம் முழுக்க நல்ல வரவேற்பைப் பெற்ற ‘ஃபாரஸ்ட் கம்ப்’ .
தற்போது அந்தப் படம் இந்தியில் ஆமீர் கான் நடிப்பில் ‘லால் சிங் சத்தா’ என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. அத்வைத் சந்தன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் கரீனா கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் பான் இந்தியா அளவில் பல மொழிகளில் வெளியாகிறது.
வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷனுக்காக அமீர் கான் சென்னை வந்திருந்தார். அப்போது பல நேர்காணல்களில் கலந்துகொண்டு படம் குறித்து பேசினார்.
எந்த நடிகர்கள் இங்கு வந்து நேர்காணலில் கலந்துகொண்டாலும் அவர்களிடம் விஜய், அஜித் பற்றி கேட்காமல் இருக்க மாட்டார்கள். அப்படி அஜித், விஜய் பற்றிய கேள்விக்கு அமீர் கான் ‘நச்’சென்று பதில் அளித்துள்ளார்.
“அஜித்திடம் எந்நேரமும் வெடிக்கக் காத்திருக்கும் மறைந்திருக்கும் உள் சக்தி அதிகம். அந்த ஆளுமை அவரிடம் இருக்கிறது, நான் அதை உணர்கிறேன்.” என்கிறார்.
அதையடுத்து “விஜய் சார் ஒரு அற்புதமான நடிகர். உண்மையில், அவருடன், என் சகோதரரைப் போன்ற ஒருவரின் தரத்தை நான் காண்கிறேன். எனக்கு அவருடன் அந்த மாதிரியான எண்ணம் உணர்வு இருக்கிறது. அவர் நம் குடும்பத்தில் ஒருவரைப் போல உணர வைக்கிறார்” என்றும் தெரிவித்துள்ளார்.