விஜய்க்கும் விக்ரமிற்கும் எப்படி நெருங்கிய பழக்கம் இருக்கிறதோ அதே போல் அஜித்துக்கும் விக்ரமிற்கும் இடையே ஒரு நல்ல நட்பு உள்ளது. இவர்களின் நட்பு, அஜித்தின் முதல் படமான ‘அமராவதி’ படத்திற்காக அஜித்துக்கு குரல் கொடுத்ததில் இருந்து ஆரம்பமானது என்று சொல்லலாம். அதற்குப் பிறகு ‘உல்லாசம்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள்.
விக்ரமின் கேரியரில் மறக்க முடியாத பாட்டு என்றால் அது ‘ஜெமினி’ படத்தின் ‘ஓ போடு…’ பாட்டாகத் தான் இருக்கமுடியும். பட்டி தொட்டு எங்கும் ஹைடெசிபலில் ஒலித்தது இந்த பாடல். முதலில் ‘ஜெமினி’ படத்திற்கு நடிக்க அஜித்தை தான் தேர்வு செய்திருந்தாராம் இயக்குநர் சரண்.
பிறகு சில காரணங்களால் அந்த படத்தில் அஜித் நடிக்க முடியாமல் போக அந்த வாய்ப்பு விக்ரமிற்கு வந்தது, அவருக்கு ஹிட்டையும் கொடுத்தது.