Monday, April 22, 2024 7:27 am

ஃபஹத் பாசில் நஸ்ரியா நாஜிம் இணைந்து மிரட்டும் நிலை மறந்தவன் படத்தின் விமர்சனம் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமாவில் மிகவும் மதிக்கப்படும் நடிகர்களில் ஒருவரான ஃபஹத் பாசில் வணிக ரீதியாக மிகப்பெரிய மைலேஜைப் பெற்றுள்ளார். இது அவரது சூப்பர் ஹிட் படமான ‘டிரான்ஸ்’ படத்தின் தமிழ் டப்பிங் பதிப்பான ‘நிலை மறந்தவன்’ என்ற தலைப்பில் வெளிவரத் தூண்டியது. தமிழ் தலைப்பு நியாயமானது, ஏனெனில் படம் உங்களை நடிப்பிலும் விஷயத்திலும் இழக்க வைக்கும்

மலையாளத்தில் ‘டிரான்ஸ்’ என வெளிவந்த படத்தின் தமிழ் டப்பிங் தான் இந்தப் படம். இயக்குனர் அன்வர் ரஷீத் மிகப் பெரிய சமுதாய கண்ணோட்டத்துடன், அக்கறையுடன், ஏமாந்து கொண்டு திரியும் மக்களுக்காக ஒரு பாடமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

கன்னியாகுமரியில் தனது மன நோய் பாதிக்கப்பட்ட தம்பி தற்கொலை செய்து கொண்டதால் அதையெல்லாம் மறக்க மும்பை செல்கிறார் பகத் பாசில். அங்கு வேலை தேடும் முயற்சியில் இறங்குகிறார். கிறிஸ்துவ மதத்தில் போலி பாதிரியார்களை உருவாக்கி, தான் சார்ந்த அந்த மதத்தின் மக்களிடம் ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பறிக்கும் கவுதம் மேனன், செம்பன் வினோத் ஜோஸ் குழுவிடம் சிக்கிக் கொள்கிறார் பகத். இந்து மதத்தைச் சேர்ந்தவரான பகத்தை, கிறிஸ்துவ பாதிரியாராக போலியாக மாற்றி, மதப் பிரசங்கம் செய்து, அந்த மக்களிடம் பணம் பறிக்கும் வேலையைக் கொடுக்கிறார்கள். குறுகிய காலத்திலேயே புகழ் பெறும் பகத், சுகபோக வாழ்க்கை வாழ்கிறார். அவரை வைத்து பிழைப்பு நடத்தும் கவுதம், செம்பன் பல கோடிகளை அள்ளுகிறார்கள். ஒரு கட்டத்தில் தான் செய்வது பாவம் என உணர்கிறார் பகத். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இப்படியெல்லாம் கூட ஒரு கதையை உருவாக்கி, பரபரப்பான திரைக்கதை அமைத்து, மதத்தின் பெயரால் ஏமாற்றிப் பிழைக்கும் ஒரு கார்ப்பரேட் கொள்ளைக் கூட்டத்தைப் பற்றி படமெடுக்க முடியுமா என ஆச்சரியப்பட வைக்கிறார் இயக்குனர். அப்பாவி மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார். அதற்காகவே இயக்குனருக்கு ஒரு பெரிய ‘சபாஷ்’ போடலாம். அற்புதக் கூட்டம் என அளவில்லாத பொய்களை அவிழ்த்து விடும் கூட்டத்தின் தோலை உரித்திருக்கிறார் இயக்குனர். ஒரு நெகிழ வைக்கும் சென்டிமென்டை வைத்து போலி மதக் கும்பலுக்கு முடிவு கட்டுவது தியேட்டர்களில் கைத்தட்டலை வரவழைக்கிறது.

கன்னியாகுமரியில் ‘மோட்டிவேஷனல் ஸ்பீச்’ வகுப்புகள், அதாவது ‘ஊக்கமளிக்கும் பேச்சு’ பயிற்சிகளை வழங்குபவர் பகத் பாசில். அங்கிருந்து அவரை அப்படியே ‘அற்புதக் கூட்டம்’ நடத்தும் போலி பாதிரியாராக அற்புதமாக உருமாற்றியிருக்கிறார் இயக்குனர். பகத் பாசிலைத் தவிர வேறு யாரும் இந்த அளவிற்கு நடித்திருக்க மாட்டார்கள் என காட்சிக்குக் காட்சி மிரட்டுகிறார் பகத். அதிலும் ஆவேசமாகப் பேசி, நோய்வாய்ப்பட்டவர்களை குணமடைய வைப்பதாக ஆட்களை வைத்து ஏற்பாடு செய்யும் காட்சிகள் படம் பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைக்கிறது. இப்படியெல்லாமா கடவுள் பெயரைச் சொல்லி கொள்ளை அடிக்கிறது ஒரு கூட்டம் என சாதாரண மக்களுக்கும் புரியும்படி சொல்லியிருக்கிறார்கள். பகத்தும் அவரை வைத்து பிழைப்பு நடத்துபவர்களும் திருந்தவே மாட்டார்களா என யோசிக்கும் போது சரியான முடிவு கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தனது மதத்தைச் சேர்ந்த அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் கார்ப்பரேட் களவாணிகளாக கவுதம் மேனன், செம்பன் வினோத் ஜோஸ். தீவிர மதப் பற்றாளர்களின் அப்பாவித்தனம் இப்படிப்பட்டவர்களுக்கு கோடி கோடியாக சம்பாதிக்கும் வாய்ப்பைக் கொடுத்துவிடுகிறது. அப்படிப்பட்ட கொள்ளை கூட்டத்திற்கு அவர்கள் மதத்தைச் சேர்ந்த ஒரு அப்பாவியை வைத்தே முடிவு கட்டுவது எதிர்பாராத ஒன்று.

படத்தின் பாதிக்குப் பிறகுதான் நஸ்ரியா வருகிறார். காதலால் வாழ்க்கையில் ஏமாந்து போன ஒரு கதாபாத்திரம். குடிப் பழக்கமும், போதைப் பொருள் பழக்கமும் உள்ள ஒரு பெண். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நஸ்ரியாவைப் பார்ப்பது தமிழ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

தமிழில் இதுவரை இப்படி ஒரு முழு படம், ஏன் ஒரே ஒரு காட்சி கூட வந்ததில்லை. இந்து மத சாமியார்களை பல படங்களில் கிண்டலடித்த சில தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு, கிறிஸ்துவ மதத்தில் கோடி கோடியாக சம்பாதிக்கும் இப்படிப்பட்ட போலி மத போதகர்களைப் பற்றி ஒரு காட்சி கூட எடுக்க தைரியம் இல்லையே என இப்படம் பார்க்கும் போது யோசிக்க வைக்கிறது.

இக்கதையை வேண்டுமென்றே எழுதியிருப்பார்கள் என ஒரு கூட்டம் பேசும். ஆனால், இக்கதையை எழுதியவரே வின்சென்ட் வடக்கன் என்ற ஒரு கிறிஸ்துவர்தான். மலையாளத்தில் வந்த படம் என்றாலும், தமிழில் டப்பிங் செய்திருக்கிறார்கள் என்று சொல்லவே முடியவில்லை. அந்த அளவிற்குப் பொருத்தமாக டப்பிங் செய்திருக்கிறார்கள். தமிழுக்கான வசனங்களும் பவர் புல்லாகவே அமைந்திருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.

நிலை மறந்தவன் – உண்மையை உரக்கச் சொல்பவன்

- Advertisement -

சமீபத்திய கதைகள்