பாலிவுட் திரையரங்கில் பிரபல முன்னணி நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட். இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டனர். மேலும் இவர்களுடைய திருமணத்திற்கு பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் நடிகை ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதும். இன்னும் ஒரு சில மாதங்களில் எனக்கு குழந்தை பிறக்க உள்ளதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
அதைத் தொடர்ந்து தனது மனைவியான ஆலியா பட்டை விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்வதற்காக ரன்பீர் கபூர் வந்தபோது அவர் மது அருந்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் ரன்வீர் கபூரின் தோற்றத்தையும் அவர் நடந்து கொண்ட விதத்தையும் இணையதளவாசிகள் விமர்சித்து. இது ஒரு பக்கம் இருக்க அவருடைய மனைவியை கூட்டிச்செல்ல வந்ததற்கு அவரின் ரசிகர்கள் பாராட்டிய வருகின்றனர்.