தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்திக் மற்றும் விஜய் சேதுபதி. நடிகர் விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்த தற்போது மக்கள் மத்தியில் மக்கள் செல்வனாக வாழ்ந்து வருகிறார்.
இவர் தற்போது கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர் கார்த்திக் 25 ஆவது திரைப்படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தின் இறுதி கட்டப் படைப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி அவர்கள் விலகியதாக சொல்லப்படுகிறது.
நடிகர் விஜய் சேதுபதி அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதால் இந்த படத்தில் இருந்து வெளியே சென்றதாக கூறப்படுகிறது