கடைசியாக ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்தே’ படத்தில் நடித்த நடிகை மீனா, நுரையீரல் தொற்று நோயால் அவதிப்பட்டு வந்த கணவர் வித்யாசாகரை இழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகர் நேற்று இரவு 7 மணியளவில் காலமானார். கோலிவுட் அதிர்ச்சியில் உள்ளது, மேலும் பிரபலங்கள் முன்னாள் ஹீரோயினுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்
கொரானா காலத்தில் மீனா குடும்பமே பாதிக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து ஒவ்வொருவராக மீண்டு வந்த நிலையில் அவர் கணவர் மட்டும் கொரானாவில் பக்கவிளைவால் நுரையீரலின் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மீனாவின் கணவன் இறந்து விட திரையுலகமே அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றது. இந்த செய்தி அறிந்து அவருடன் சேர்ந்து 3 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் கூல் சுரேஷ் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
கூடவே நுரையீரல் தானம் செய்திருந்தால் அவரை பிழைக்க வைத்திருக்கலாம் என மருத்துவர் கூறியதை அறிந்தேன். இதை மீனா மேடம் முன்னாடியே கூறியிருந்தால் நானும் என்னுடைய நற்பணி மன்றமும் சேர்ந்து அதற்கான உதவிகளுக்கு முன்னேற்பாடுகளை செய்து அவரது கணவரை காப்பாற்றியிருப்போம் என உருக்கமாக பேசியிருந்தார். மேலும் அவர் வெளியூரில் இருப்பதால் வர முடியவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.