ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தில் ராஷிகண்ணா அல்லது ஆண்ட்ரியா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது பிரபல நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் ‘சந்திரமுகி 2’ திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும், முக்கிய வேடத்தில் வடிவேலு நடிப்பதாகவும், இந்த படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி என்றும் இந்தப் படத்தை முதல் பாகத்தை இயக்கிய பி. வாசு இயக்க இருப்பதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
லைகா புரடக்ஷன் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுவது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் த்ரிஷா இந்த படத்தில் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.