தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரா வலம் வரபவர் தான் சூர்யா. இவர் தற்பொழுது பாலா இயக்கத்தில் தனது 41வது படத்தில் நடித்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் என்னும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இவர் பிரபல நடிகையான ஜோதிகாவைக் காதலித்து 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார் என்பதும் தெரிந்ததே. இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்.
தற்பொழுது சூர்யா மட்டுமல்ல ஜோதிகாவும் பிஸியாக நடித்து வருகின்றார். இருப்பினும் இவர்களின் பிள்ளைகள் இருவரும் சினிமாவில் இன்னும் கால் பதிக்கவில்லை. தியா டென்னிஸ், கால்பந்து விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வருகிறார். தேவ், கராத்தே கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் மகள் தியா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தியாவின் மார்க் சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. தனது மகளின் மார்க்கை பார்த்து நடிகர் சூர்யா மகிழ்ச்சி அடைந்துள்ளாராம். தமிழ்- 95, ஆங்கிலம் -99, கணிதம் – 100, அறிவியல்-98, சமூக அறிவியல்-95 எடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிலும் 95% அளவிற்கு மதிப்பெண்களை பெற்றுள்ளார் தியா. இதனால் ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு சூர்யா அகரம் அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.