தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் ரஜினி, கமல் ஆகியோருக்கு கடும் போட்டி என கருதப்பட்டவர் விஜயகாந்த். கேப்டன் பிரபாகரன் மூலம் இன்னும் அதிக உச்சத்திற்கு சென்றதால் கேப்டன் விஜயகாந்த் என்று ரசிகர்களால் அன்போடு தற்போது வரை அழைக்கப்பட்டு வருகிறார்.
திரையில் எவ்வளவு கம்பீரமாக இருப்பாரோ, அதே கம்பீரம் குறையாமல் நிஜ வாழ்விலும் இருப்பார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் பலர் கூறுவர். அவருடன் பழகிய பல திரை நண்பர்கள், தற்போது நான் விஜய்காந்தை பார்த்தால் அழுதுவிடுவேன். என்றும், முன்னாடி எப்படி இருந்தார் என் நண்பர் விஜயகாந்த். தற்போது அவர் இப்படி இருக்கிறார். என்று பலரும் வருத்தப்படும் செய்தியை நாம் அறிந்திருப்போம்.
தற்போது, அவர்களுக்கும், மக்களுக்கும் மேலும் ஓர் அதிர்ச்சி சம்பவம் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. விஜயகாந்த் உடல்நிலை முன்பு மாதிரி இல்லை. தற்போது அவரது உடல்நிலை நன்றாக இல்லையாம்.
சமீபத்தில் அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரது உடல் நிலையில் ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தால், அவர் உடலிலிருந்து காலில் 3 விரல்களை மருத்துவர்கள் நீக்கி உள்ளனராம். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், பலர் விஜயகாந்த் மீண்டும் பழைய தெம்புடன் புத்துயிர் பெற்று வர வேண்டும் என்று கடவுளை வேண்டி வருகின்றனர். அவர் மீண்டும் அதே கம்பீரத்தோடு வருவார் என்று நாமும் நம்புவோம்.