சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த இறுதி சுற்று படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங்.
இதன்பின், விஜய் சேதுபதியுடன் இணைந்து ஆடவன் கட்டளை, ராகவா லாரன்ஸுடன் இணைந்து சிவலிங்கா என நடித்து வந்தார். மேலும், கடந்த 2020ஆம் ஆண்டு அசோக் செல்வனுடன் இவர் இணைந்து நடித்து வெளிவந்த ஓ மை கடவுளே திரைப்படம் மீண்டும் ஒரு திருப்பத்தை ரித்திகாவிற்கு ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து தற்போது சில படங்களில் மட்டுமே நடித்து வரும் ரித்திகா, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில், தற்போது ரித்திகா சிங் சமீபகாலமாக கிளாமர் பக்கம் திரும்பியுள்ளார். அதற்கு ஏற்றாற்போல் சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போதும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், பட வாய்ப்புக்காக இப்படியா என்று கூறி வருகிறார்கள்.