- Advertisement -
வேலூர், திருவண்ணாமலை, ஆரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
போலீசார் அவர்களை சுற்றி வளைத்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மற்ற மாநிலங்களில் நடக்கும் அசம்பாவித சம்பவங்கள் போல் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பீகார், உத்தரபிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த இரண்டு நாட்களாக கோபமடைந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- Advertisement -