Wednesday, May 1, 2024 12:24 am

பொறுத்தது போதும் 40 வயதில் திரிஷா எடுத்த அதிரடி முடிவு !! மாப்பிள்ளை யார் தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

த்ரிஷா திருமணம்: லேடி சூப்பர் ஸ்டாரின் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ள த்ரிஷா, தற்போது 40 வயதைக் கடந்தும், நயனை விட ஒரு வயது மூத்தவர். அவரை எப்போது திருமணம் செய்து கொள்வார் என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகர் திரிஷா துணை நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், ஜோடி படத்தில் நடிகை சிம்ரன் தோழியாக நடித்தவர் திரிஷா, இயக்குனர் அமீர் இயக்கத்தில் மௌனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் திரிஷா. அடுத்து அவர் நடிப்பில் வெளியான சாமி படம் திரிஷாவை மிக பெரிய உச்சத்துக்கு எடுத்து சென்றது. அடுத்த குறுகிய காலத்தில் டாப் ஹீரோயினாக வலம் வந்த திரிஷா தமிழ் தெலுங்கு படங்களில் பிசியான நடிகையானார்.

அலை படத்தில் நடிக்கும் போது நடிகர் சிம்பு உடன் நெருக்கமாக பழகினார் திரிஷா, இருவரும் காதலிப்பதாக கூட கிசு கிசுக்கள் வெளியானது. சிம்பு பல பேட்டிகளில் தனக்கு பிடித்த தோழி திரிஷா என்று வெளிப்படையாக தெரிவித்தார். அடுத்தடுத்து திரிஷா உடன் ஜோடி சேர்ந்து படத்தில் நடிக்கவில்லை என்றாலும் கூட பொது இடங்களில் இருவரும் ஒன்றாக சுற்றி வந்தனர், ஆனால் நாங்கள் நண்பர்கள் மட்டும் தான் என திரிஷாவுக்கு கல்தா கொடுத்தார் சிம்பு.

இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு தொழில் அதிபர் வருண் மணியன் உடன் திரிஷாவுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் முடிந்தது, இவர்களின் திருமணம் ஏற்பாடுகளும் மிக தீவிரமாக நடந்து வந்த நிலையில், திரிஷா – வருன் மணியன் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த திருமணம் பாதியிலே நின்றது, இதன் பின்பு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிய திரிஷா, தெலுங்கு நடிகர் ராணாவை காதலித்து வந்தார்.

நடிகர் ராணா சென்னை வந்தால் திரிஷா வீட்டில் தான் தங்கி வந்துள்ளார், அதே போன்று தெலுங்கு சினிமா நிகழ்ச்சிகளில் திரிஷா – ராணா இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு வந்தனர், வெளிநாடுகளில் நடக்கும் சினிமா நிகழ்ச்சிகளுக்கு செல்லும் திரிஷா – ராணா இருவரும் ஒரே ஓட்டலில் ஒரே அறையில் தங்குவதாக அப்போது கிசு கிசுக்கள் எழுந்தது, இதனை தொடர்ந்து இருவரும் காதலித்து வருவதால் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டது.

ஆனால், சிம்புவை போன்று திரிஷா எனக்கு நல்ல தோழி என்று தெரிவித்து விட்டு திரிஷாவை கழட்டி விட்டார் ராணா, இதனால் மன வேதனையில் இருந்த திரிஷா. தான் காதலித்து வந்த ராணாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் போது, த்ரிஷா அவரை தாக்குவது போல ஒரு பதிவை அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இப்படி தொடர்ந்து காதல் தோல்வியால் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் திரிஷாவுக்கான திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

39 வயதாகும் நடிகை திரிஷாவுக்கு வீட்டில் தொழில் அதிபர் மாப்பிள்ளையாக பார்த்து வருகின்றனர், வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக சில கண்டிஷன் போட்டுள்ளாராம் திரிஷா,அதில் மாப்பிளை கோடீஸ்வர தொழில் அதிபராக இருக்க வேண்டும், திருமணத்திற்கு பின்பும் தன்னை சினிமாவில் நடிக்க அனுமதிக்க வேண்டும் என திரிஷா கண்டிஷனை முன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது, இதில் மீண்டும் திரிஷா சினிமாவில் நடிக்கும் கண்டிசனை கேட்டு பல தொழில் அதிபர்கள் ஓட்டம் எடுப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்