நடிகை நயன்தாராவிற்கு கடந்த ஜூன் 9ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளார்கள்.
விக்னேஷ் சிவனுக்கு முன் நடிகை நயன்தாரா பிரபு தேவா மற்றும் சிம்புவுடன் காதலில் இருந்தது திரையுலகம் அறிந்த விஷயம் தான். பிரபு தேவாவுடன் நயன்தாராவின் காதல் முறிவுக்கு, பிரபு தேவாவின் மனைவி தான் காரணம் என்று தெரியும்.
ஆனால், சிம்புவுடன் நெருக்கமாக காதலித்து வந்த நயன்தாரா எதனால், சிம்புவை விட்டு பிரிந்தார் என்று தெரியுமா. இதுகுறித்து நடிகை நயன்தாராவே பேட்டி ஒன்றில் பேசியுள்ளாராம்.
இதில், ‘நம்பிக்கை இல்லாத போது, அங்கு காதல் இருக்காது. நம்ப முடியாதவர்களுடன் வாழ்வதை விட பிரிந்து செல்வதே மேல் என்பதால், சிம்பு மற்றும் பிரபுதேவாவை பிரிந்தேன்’. இதுவே அவரது 2 காதல் தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.