- Advertisement -
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டி வெற்றி மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன் இலக்கை சேஸிங் செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
2019ம் ஆண்டு ஹைதராபாத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 208 ரன்களை சேஸ் செய்ததே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. நேற்றைய போட்டியில், ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை துரத்திய இந்தியா, 19.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியில், கேப்டன் சூர்யகுமார் 80 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும், இஷான் கிஷான் 58 ரன்கள், ரிங்கு சிங் 22 ரன்கள் எடுத்தனர்.
இந்த வெற்றியுடன், 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
- Advertisement -