நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இதற்குப் பிரதமர் மோடி, ஸ்டாலின் , ரசிகர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், கிரிக்கெட்டின் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனது ஆறுதலைத் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான சச்சினின் கருத்துக்களுக்கு எப்போதுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவே, அவர் இந்திய அணிக்கு ஆறுதல் தெரிவித்தது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
“ஆறாவது முறையாக 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு எனது பாராட்டுகள். இந்திய அணியின் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வேதனையை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். வெற்றி, தோல்வி விளையாட்டின் ஒரு பகுதி தொடரில் சிறப்பாக ஆடிய இந்திய அணியின் பங்கு நினைவில் இருக்கும்” என இவ்வாறு சச்சின் கூறியுள்ளார்.