இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி, அனு இமானுவேல் நடிப்பில் இன்று (நவ .10) வெளியான “ஜப்பான்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளியானதும், ரசிகர்கள் படத்தைப் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நடிகர் கார்த்தி காசி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்தபின் நடிகர் கார்த்தி பேட்டி அளித்துள்ளார். அதில், அவர் ” எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமாக உள்ளது, ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர், என்னுடைய மனது மிகவும் நிறைவாக உள்ளது” என்றார்.
மேலும், அவர் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், இந்த ‘ஜப்பான்’ படம் தொடர்பான ஸ்பாய்லர் விடாமல் இருக்க வேண்டும்” எனக் கேட்டுள்ளார்.