Tuesday, April 30, 2024 9:20 am

பாக்கியலட்சுமி சீரியலில் அப்பனுக்கு புள்ள தப்பாம பிறந்திருக்கு !ஈஸ்வரியின் நிலைமை! மாலினியிடம் டீல் பேசிய பாக்கியா !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆரம்பத்தில் அலுவலக வேலைக்காக மாலினியிடம் பேசியதாகவும், பின்னர் அவளுக்காக வருத்தப்பட்டதாகவும் செழியன் கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளார். பாக்யா செழியனை சமாதானப்படுத்தி, நிலைமையை கையாள்வதாக உறுதியளிக்கிறார். எபிசோட் முடிவடைகிறது, அடுத்த எபிசோடில் வெளிவரும் உறவுகள் மற்றும் உணர்ச்சி மோதல்கள் குறித்து பார்வையாளர்களை ஆர்வமாக வைக்கிறது.

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து எவ்வாறு நகரும் என்பதை பார்ப்போம்.அதிரடியாக வீட்டில் என்ட்ரி கொடுத்த மாலினியை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

கோபியை பார்த்து “நீங்க தான் செழியனோட அப்பாவா? நான் மாலினி” என தன்னை கோபியிடம் அறிமுகப்படுத்தி கொள்கிறாள் மாலினி. “நான் தான் உன்னை ஆபிஸ் வேலையை ஆபீஸிலேயே வைத்து பேசுன்னு சொன்னேன்ல. நீ வீட்டுக்கு வர கூடாது என சொல்லியும் என் வந்த. முதலில் இங்க இருந்து கிளம்பு” என மாலினியை பாக்கியா விரட்ட மற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பாக்கியாவுக்கு சப்போர்ட்டாக ராமமூர்த்தியும் மாலினியை கிளம்ப சொல்கிறார்.

“நான் ஆபீஸ் விஷயமா வரலை. பர்சனலா நான் செழியன் கிட்ட பேசணும்” என சொல்லி “செழியா கீழ இறங்கி வா” என நடுவீட்டில் நின்று கொண்டு பயங்கரமாக கத்துகிறாள் மாலினி. அதை பார்த்து அனைவரும் அவளை திட்டுகிறார்கள். கீழே இறங்கி வந்த செழியன் மாலினியை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். “என்ன ஆண்ட்டி என்ன பார்த்த பயமா இருக்கா” என பாக்கியவை பார்த்து கேட்கிறாள் மாலினி. “நான் எதுக்கு உன்னை பார்த்து பயப்படணும். என்ன மிரட்டுறீயா?” என பாக்கியா கேட்க “நான் உண்மையை சொல்ல தான் வந்தேன். செழியா நீ சொல்றியா இல்ல நானே சொல்லவா?” என சொல்ல “அதெல்லாம் ஒன்னும் கிடையாது. நீ கிளம்பு இங்கே இருந்து. வா ஜெனி நாம மேல போகலாம்” என அழைக்கிறான் செழியன்.

“இவங்க ஏதோ சொல்லணும்ன்னு சொல்றங்க இல்ல. சொல்லட்டும்”என ஜெனி சொல்ல “இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்க எல்லாருக்கும் உண்மை தெரிந்து விடும்” என மாலினி பீடிகை போட “நீ சொல்ல வேண்டாம், நானே சொல்றேன்” என செழியன் சொல்கிறான். அதற்குள் மாலினி “செழியன் என்னை ஏமாத்திட்டான். நான் ஏமாந்து போய் நிக்கிறேன்” என மாலினி சொல்ல “நான் இவளை ஏமாத்தவில்லை. என்னை நம்புங்கள். இவ பொய் சொல்றா” என கதறுகிறான் செழியன்.

செழியனுடன் பேசி பழகியதை பற்றி மாலினி சொல்ல “இது எல்லாம் தெரிந்ததுதானே. இதுல ஏமாத்துறதுக்கு என்ன இருக்கு” என ஜெனி மாலினியிடம் கேட்கிறாள். “அப்போ உங்களையும் ஏமாத்தி இருக்கான் ஜெனி” என மாலினி சொன்னதும் ஜெனி அதிர்ச்சி அடைகிறாள்.

“எனக்கும் செழியனுக்கும் ஆபீஸ் தவிர வேற ஒரு ரிலேஷன்ஷிப் இருக்கு” என மாலினி சொன்னதும் வீட்டில் இருக்கும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அவர்கள் நம்பாமல் செழியனுக்கு சப்போர்ட்டாக பேச மாலினி “செழியன் கல்யாணம் நடந்ததை பத்தி எல்லாம் சொல்லாமல் மறைச்சு தான் என்னிடம் பழகினான். குழந்தை பிறந்த பிறகு தான் சொன்னான். ஜெனிக்கு என்னை பிடிக்கவில்லை. எங்க இரண்டு பேருக்கும் ஒத்துவரவில்லை. நான் அவளை டைவர்ஸ் பண்ணிட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் எல்லாம் சொன்னியே” என மாலினி ஷாக் கொடுக்க “நான் சொல்லவில்லை ஜெனி” என கதறுகிறான் செழியன்.

“இத்தனை நாள் நான் பொறுமையா இருந்தேன். இனிமேல் என்னால் இருக்க முடியாது. என்னிடம் இருந்து விலகி போகிறான். எல்லாரும் தான் நியாயம் சொல்லணும்” என மாலினி சொல்ல “யாரும் இவளை நம்பாதீங்க” என செழியன் சொல்ல “எனக்கு ஒரு பதில் கிடைக்காமல் நான் இங்க இருந்து போகமாட்டேன்” என மாலினி விடாபிடியாக பேசி இருவரும் சேர்ந்து எடுத்துக்கொடுத்த போட்டோவை காட்ட வீட்டில் உள்ள அனைவரும் அப்படியே உறைந்து போய் நிற்கிறார்கள்.

ஜெனிக்கு தலையே சுற்றுகிறது. “பாருங்க இன்னும் நிறைய போட்டோஸ் இருக்கு. இந்த விடியோவை பாருங்க” என சொல்லி மாலினி மடியில் செழியன் படுத்து கொண்டு பேசும் வீடியோவை காட்டுகிறாள் மாலினி. கலங்கி நிற்கிறாள் ஜெனி. அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதேபோல, மெயின் வில்லனாக களமிறங்க போகிறார் கணேஷ். தனது மனைவி பிள்ளையை மீட்கும் நோக்கத்தில் பொறுமையை இழந்து பாக்கியாவின் வீட்டை இரண்டாக ஆக்கப்போகிறார். எனவே, பாக்கியா தொடர் இனி அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை கொண்டு நகரும் என்பதில் ஐயமில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

மாலினியும் செழியனும் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்த செல்வி, அதைப் பற்றி பாக்யாவிடம் தெரிவித்தார். மாலினி சென்ற பிறகு, பாக்யா செழியனை எதிர்கொண்டு என்ன நடக்கிறது என்று கேட்டாள். மாலினி தன்னை மிரட்டுவதாகவும், அலுவலக வேலை காரணமாக முதலில் அவளிடம் பேசியதாகவும், பின்னர் அவள் மீது பரிதாபப்பட்டதாகவும் செழியன் கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் அவளை ஒரு சைக்கோ என்று வர்ணித்தார்.
பாக்யா செழியனை சமாதானப்படுத்தினாள், ஒரு பெண்ணை மிரட்ட வேண்டிய அவசியமில்லை, நீ தவறு செய்துவிட்டாயா என்று கேட்டாள். செழியன் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்தார், மேலும் பாக்யா நிலைமையை கவனித்துக்கொள்வதாக உறுதியளித்தார், மேலும் அவரை வீட்டிற்கு செல்லுமாறு கூறினார்.
எபிசோட் முடிவடைகிறது, வரவிருக்கும் எபிசோடில் சிக்கலான உறவுகள் மற்றும் உணர்ச்சி மோதல்கள் எவ்வாறு வெளிப்படும் என்பது பார்வையாளர்களை சந்தேகத்தில் ஆழ்த்துகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்