நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மீதமிருக்கும் போட்டிகளிலிருந்து, காயம் காரணமாக இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா, வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் பந்தைத் தடுக்க முயற்சித்தபோது இடறிவிழுந்து கணுக்காலில் காயம் அடைந்தார். அந்த காயம் குணமடையாமல் இருப்பதால், அவர் தொடரிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஹர்திக் பாண்ட்யா, இந்திய அணியின் முக்கிய ஆல்-ரவுண்டராக திகழ்கிறார். அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளார். அவரின் விலகல், இந்திய அணிக்குப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
அதேசமயம், பிரசித் கிருஷ்ணா, இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர். அவர் கடந்த சில வருடங்களாகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். ஹர்திக் பாண்ட்யாவின் விலகலைச் சமாளிக்க, பிரசித் கிருஷ்ணாவை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா அணியில் சேர்த்துள்ளார்.
இந்தியா, உலகக் கோப்பை தொடரில் இன்னும் இரண்டு லீக் போட்டிகள் , அரையிறுதி போட்டியில் வென்றால் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. தற்போது மீதமுள்ள போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று, மூணாவது முறையாக உலகக் கோப்பையை வென்று, அசத்த வேண்டும் என்று இந்திய அணி திட்டமிட்டுள்ளது