Monday, April 29, 2024 11:43 am

இமான் விவகாரத்தில் தப்பை மறைக்க பல கோடி செலவு செய்யும் சிவகார்த்திகேயன் !உண்மையிலேயே நடந்தது என்ன?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் இசையமைப்பாளர் டி இமான் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் கடந்த காலங்களில் சூப்பர்ஹிட் பாடல்களை வழங்கியுள்ளனர். இருப்பினும், இருவருக்கும் இடையில் எல்லாம் சரியாக இல்லை. சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அவர்களுக்கிடையேயான விரிசலை நிவர்த்தி செய்த இமான், இந்த வாழ்நாளில் சிவகார்த்திகேயனுடன் ஒருபோதும் பணியாற்ற மாட்டேன் என்று கூறினார். பிரச்சினை என்ன என்பதை விளக்காமல், சிவகார்த்திகேயன் தனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் தனக்கு துரோகம் செய்ததாக இமான் வெளிப்படுத்தினார்.சிவகார்த்திகேயனின் தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில், இசையமைப்பாளர் இமான் பல சார்ட்பஸ்டர் ஹிட்களை வழங்கியிருந்தார், அவை இன்னும் அனைவரின் பிளேலிஸ்ட்களிலும் ஆட்சி செய்து வருகின்றன. இருப்பினும், அவர்கள் ஒத்துழைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியான மனம் கொத்தி பறவை படத்திற்காக இசையமைத்திருந்தார் டி.இமான். அடுத்து வெளியான சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டு பிள்ளை, சீமராஜா உள்ளிட்ட படங்களுக்கு டி.இமான் இசையமைப்பாளராக இருந்துள்ளார். இப்படத்தின் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றனர். ‘சீமராஜா’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் டி.இமான் கூட்டணி மீண்டும் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த ஜென்மத்தில் தானும் சிவகார்த்திகேயனும் இனி இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை என்றும் இதற்கு சிவா செய்த மிகப்பெரிய துரோகம்தான் காரணம் என்றும் கூறியுள்ளார் இமான். மேலும் “அது என்னவென்று என்னால் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. அது தனிப்பட்ட விஷயம். இது நான் மிகவும் கவனமாக எடுத்த முடிவு. அவர் செய்த துரோகம் தாமதமாகத்தான் தெரியவந்தது. இதுபற்றி அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன். அவர் கூறிய பதிலை என்னால் பகிர இயலாது,” என்று இமான் தெரிவித்துள்ளார்.இமான் இப்படி பட்டும்படாமல் சொன்னது இணையத்தில் மிகப்பெரிய புயலை கிளப்பி உள்ளது. இமானுக்கு அண்மையில் விவாகரத்தான நிலையில், அந்த விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று சோசியல் மீடியாவில் செய்தி பரவி வருகிறது. ஆனால், தமக்கு பட வாய்ப்புகள் குறைந்து போனதால் சிவகார்த்திகேயன் மீது இமான் வீண்பழி சுமத்துவதாக அவரது முதல் மனைவி கூறியுள்ளார்.

இருந்தாலும் நடிகர் சிவகார்த்திகேயன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தது உண்மைதான் என மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், வலைப்பேச்சு பிஸ்மி, வலைப்பேச்சு அந்தணன் ஆகியோர், பல்வேறு ஊடகங்களில் பேசி வருகின்றனர். இதனால், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள அயலான் திரைப்படம் மிகப்பெரிய அடி வாங்கும் எனக்கூறப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயனுக்கு தமிழ்நாடு முழுக்க அதிக ஆதரவு தந்த தாய்மார்களின் ஆதரவு இல்லாமல் போகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் சிலரிடம் விசாரிக்கையில், இது நடிகர் சிவகார்த்திகேயன் மேல் பொறாமையில் இருக்கும் ஒரு பெரும் நட்சத்திரப்பட்டாளம், அவரது மார்க்கெட்டை காலி செய்ய தூண்டிவிட்ட சம்பவம் எனவும் பேசி வருகின்றனர். தொடர்ச்சியாக அவரது படங்களான டாக்டர், டான் மற்றும் மாவீரன் ரூ.100 கோடி வசூல் செய்துவருவது பிடிக்காமல் இதைக் கிளப்பிவிட்டுள்ளதாகவும் கூறிவருகின்றனர்.

இதேபோல், 80களில் முன்னணி நடிகராக வலம் வந்த மைக் மோகன், ரஜினி, கமல்ஹாசனை விட உச்சத்தில் இருந்தபோது, அவரது மார்க்கெட்டை உடைக்கப் பலர் முயன்று செயல்பட்டுள்ளனர். குறிப்பாக, அவர் பெண்கள் விஷயத்தில் படுவீக் எனவும், மைக் மோகனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகவும் பரப்பிய வதந்தி, அவரை திரையுலகை விட்டு பாதாளத்தில் தள்ளியது. இந்நிலையில் இத்தனை வனவாசத்துக்குப் பின், நடிகர் மைக் மோகன், விஜய்-யின் 68ஆவது படத்தில் நடித்து கம்பேக் கொடுக்கவுள்ளார்.

இதேதான் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் செய்கிறார்கள் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில் அதே ஃபார்முலாவைப் போட்டு, நடிகர் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை உடைக்கப்பார்க்கின்றனர் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்விவகாரம் குறித்து சிவகார்த்திகேயன் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. இதுகுறித்து சிவகார்த்திகேயன் வாயை திறந்தால் மட்டும் தான், உண்மை என்ன என்பது தெரியவரும்.

நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில், ஏ.ஆர்.முருகதாஸுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து அவர் இயக்கத்தில் நடிப்பதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் ஒரு நகைச்சுவை நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், இறுதியில் தொலைக்காட்சியில் நுழைந்தார், அங்கு அவர் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கினார். பின்னர் சினிமாவில் அடியெடுத்து வைத்து தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார்.

தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் இமான் ஒருவர். இவர்கள் இருவரும் இணைந்து ‘மனம் கொத்தி பறவை’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’, ‘சீமராஜா’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆகிய ஐந்து படங்களில் பணியாற்றியுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்