- Advertisement -
சென்னையில் கடந்த ஞாயிறுக்கிழமை மாலை 7 மணியளவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட பல குளறுபடிகளுக்கு, ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என நடிகர் கார்த்தி வலியுறுத்தியுள்ளார்.
அதில், அவர் “ ஒரு இசை நிகழ்ச்சியில் வருந்தத்தக்க விஷயங்கள் நடந்ததை நினைத்து ஏ.ஆர்.ரஹ்மான் பெரிதும் வருந்தியிருப்பார் என நம்புகிறேன். நம் அனைவர் மீதும் ரஹ்மான் அன்பு செலுத்துவதைப் போல, ரசிகர்களும் வெறுப்பைத் தவிர்த்து, அன்பைத் தேர்ந்தெடுங்கள்” என்றார்.
- Advertisement -