Thursday, May 2, 2024 6:46 pm

ரசிகர்களுக்கு இந்திய அணியின் அஸ்வின் வைத்த கோரிக்கை

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கிரிக்கெட்  ரசிகர்களுக்கு இந்திய அணியின் பந்துவீச்சாளர் அஷ்வின் அவர்கள், ” கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா ஐசிசி டிராஃபி ஜெயிக்கவில்லை தான். ஒவ்வொரு தொடருக்குள் செல்வதற்கு முன், “இந்தியாகிட்ட ஐசிசி டிராஃபி இல்ல” என இதையே தொடர்ந்து சொல்கிறார்கள். 1983, 2007, 2011, 2013 என இவ்வளவு கோப்பைகள் வைத்திருக்கிறோமே, இருப்பதை வைத்து சந்தோசப்படுவோம் கிரிக்கெட் விளையாடும் நாடாக எந்த அளவுக்கு இந்தியா உயர்ந்துள்ளது என்பதை ரசிகர்கள் உணர வேண்டும்” என்றார்.

மேலும், அவர் ” இனி அக்டோபர் மாதத்தில் நமது சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பை என்பதால் நாம் வெல்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே, இந்த தருணம் முதல், இந்திய அணி குறித்து நேர்மறையான கருத்துகளை மட்டும் கூறுவோம், எதிர்மறை கருத்துகளைத் தவிர்ப்போம்; இதுவே ஒரு கிரிக்கெட் வீரராகவும், விளையாட்டின் ரசிகராகவும் நான் வைக்கும் கோரிக்கை” எனக் கூறியுள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்