தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினி காந்த் அவர்களின் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது
அப்போது,மேடையில் நடிகர் ரஜினி ” அனைத்து மக்கள் இந்த ஜெயிலர் திரைப்படத்தை திரையரங்கிற்கு வந்து படம் பாருங்கள்” என்று பேசினார். இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், இந்த “ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி அனைவரும் திரையரங்கிற்கு வந்து படம் பாருங்கள் என்று பேசினார். அது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதுபோல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ரஜினிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.