நடிகர் அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படம் ரசிகர்கள் பல நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படம் குறித்து இசையமைப்பாளர் டி.இமான் அவர்கள், ” இந்த 50 நாட்களாகத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ‘கழுவேத்தி மூர்க்கன்’ பற்றி எழுதி வருகிறார்கள். தலைவர்களும், திரையுலகப் பிரமுகர்களும், முற்போக்குவாதிகளும் படத்தைப் பற்றிப் பல தளங்களில் பேசி வருகிறார்கள்” என்றார்.
மேலும், அவர் ”இப்படி ஒரு நல்ல திரைப்படம் சமூகத்தில் ஒரு உரையாடலை உருவாக்க வேண்டும், எதையாவது விட்டுவிட்டு, திரைப்படத்தின் சூழலில் உருவாகும் சூழல்களால் அதை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும். அதுதான் வெற்றி. நம்ம அடி வாங்குறவங்க பக்கம் தான் நிக்கனும், அவர்களை அடி வாங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தோள் கொடுத்தவர்களுக்குக் கைகுலுக்கி நன்றியும் பூங்கொத்துகளும்.. பயணம் தொடர்கிறது” ட்வீட் மூலம் தனது நெகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.
- Advertisement -