- Advertisement -
இந்தியாவில் இந்த நடப்பு ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியது. அதன்படி, நேற்று (மே 28) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதும் இறுதி போட்டி தொடர் மழை காரணமாக ரத்தானது.
இந்நிலையில், நேற்று நடக்க இருந்த ஐபிஎல் இறுதிப் போட்டி கனமழை காரணமாக இன்று (மே 29) இரவு 7.30 மணிக்கு மீண்டும் போட்டி தொடங்கும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேசமயம், இந்த போட்டி நடத்த இயலாவிட்டால் குஜராத் அணிக்கு இந்த ஆண்டு கோப்பை வழங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- Advertisement -