சென்னையில் சமீபத்தில் தனியார் விருது வழங்கும் விழா நடைபெற்று இருந்தது. அதில் பங்கேற்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அங்கிருந்த மேடைக்கு ஏ.ஆர்.ரஹ்மானை அழைத்தனர். அப்போது மடியில் பேசிக்கொண்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவியான சாய்ரா பானுவை மேடைக்கு பேச வரும்படி அழைத்துள்ளார். அந்த நேரத்தில் சாய்ரா பானு பேச முற்பட்டபோது ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் ”இந்தியில் பேச வேண்டாம்” தமிழில் பேசுங்கள் எனக் கூறியுள்ளார்.
இது அங்குள்ள ரசிகர்கள் கேட்டு பலமாக கைதட்டி உள்ளனர். பின்னர் சாய்ரா பானு அவர்கள் பேசியது, ” எனக்கு தமிழ் சரளமாக பேச தெரியாது என்றும், ஏ.ஆர்.ரஹ்மானை அவரது குரலால் மட்டுமே நான் நேசித்தேன்,அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்.” என சுருக்கமாக பேசியது தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.