இந்திய சினிமாவுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி வெற்றி பெற்றவர். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள பாபட்லா மாவட்டத்தின் அருகே அலபாடு கிராமத்தை சேர்ந்த தெனாலி சந்தீப் எனும் ரசிகர் தனது வீட்டிலேயே நடிகை சமந்தாக்கு கோயில் கட்டி வருகிறார்.
இதுகுறித்து பேசிய ரசிகர் சந்தீப் அவர்கள், நடிகை சமந்தா பிரத்யூஷா என்னும் அறக்கட்டளையின் மூலம் பல சேவைகளை செய்து வருவதை அறிந்து எனக்கு அவர் மீது மதிப்பு கூடியது. அதனால் தனது வீட்டின் பாதி இடத்திலேயே அவரது கோயிலை கட்டி வருகிறேன். இதன் இறுதி கட்ட வேலை தற்போது நடந்து வருவதாகவும், இதன் திறப்பு நாளை நடைபெறும் என கூறியுள்ளார்.
மேலும், ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகைகளுக்கு கோயில் கட்டி வழிபடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். அதில் முதற்ட்டமாக நடிகை குஷ்புவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தனர். இதனையடுத்து நடிகை நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி, நமீதா உள்ளிட்டவருகளுக்கு ரசிகர்கள் கோவில் காட்டினர். ஆகவே, தற்போது நடிகை சமந்தாவும் வரிசையில் இணைந்துள்ளார்.