Saturday, April 27, 2024 6:21 am

Pathu Thala Movie Review : ஏஜிஆர்-ஆக மிரட்டும் சிம்புவின் பத்து தல படத்தின் முழு விமர்சனம் இதோ !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படத்தில் நடிகர்கள் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், டீஜய், சந்தோஷ் பிரதாப், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் சில முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘சில்லுன்னு ஒரு காதல்’ புகழ் ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் டிஆர் மற்றும் கௌதம் கார்த்திக் நடித்துள்ள ‘பாத்து தலை’ திரைப்படம் மார்ச் 30, 2023 அன்று ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழுடன் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தப் படம் ‘மஃப்டி’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும், இதில் ப்ரியா பவானி சங்கர், மெட்ராஸ் புகழ் கலையரசன், மனுஷ்யபுத்திரன் மற்றும் அசுரன் புகழ் டீஜய் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் பத்து தல. இதில் நடிகர் சிம்பு ஏஜிஆர் என்கிற டான் கேரக்டரில் நடித்துள்ளார். மணல் மாஃபியாவை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை ஒபிலி என் கிருஷ்ணா இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். பத்து தல திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 450-க்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் முதல் சிம்பு படம் இது என்பதால் காலையிலேயே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், சிம்புவின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், மேள தாளங்கள் முழங்க இப்படத்தின் ரிலீசை கொண்டாடினர்.

விக்ரம் படம் போலவே இடைவேளையில் சிம்புவை அறிமுக படுத்தி இருக்கிறார்கள். அது ஏதோ வலிந்து திணிக்கப்பட்டது போல இருக்கிறது.
தமிழ்நாட்டின் முதல்வர் சந்தோஷ் பிரதாப்புக்கும், அவரது அண்ணன் கெளதம் மேனனுக்கும் இடையேயான பிரச்சினையில் சந்தோஷ் கடத்தப்படுகிறார். சி.எம். மிஸ்ஸிங் செய்தி தமிழ்நாட்டை பரபரப்பாக மாற்றுகிறது. இதற்கிடையே தற்காலிக முதல்வராக மணல் கடத்தல் ஜாம்பவான் ஏ ஜி ஆரின்(சிம்பு) விசுவாசி கிருஷ்ணா பொறுப்பேற்கிறார்.

அவர் ஏ ஜி ஆருக்கு ஆதரவாக செயல்பட கவுதமுக்கும் அவருக்கும் முட்டல் உருவாகிறது. இதற்கிடையே போலீஸ் அதிகாரியான கவுதம் கார்த்திக் பல சம்பவங்களை செய்து ஏ ஜி ஆரின் ஆட்களில் ஒருவராக மாறுகிறார். இறுதியில் சி.எம் விவகாரம் எங்கு போய் முடிந்தது? கவுதம் கார்த்திக்கின் நிலமை என்ன ஆனது? சிம்புவின் மாஸ்டர் பிரைன் போட்ட ஸ்கெட்ச் என்ன?

உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே பத்து தல படத்தின் கதை. சிம்புவின் ஸ்கிரீன் பிரசன்ஸ் அதகளம் செய்கிறது. அவர் பேசும் ஒவ்வொரு வசனமும், அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் அப்லாசை அள்ளுகிறது.

வில்லனாக வரும் கெளதம் மேனனும் மிரட்டி இருக்கிறார். படத்தில் இருக்கும் நாகர்கோவில் பாஷை படத்திற்கு ஒரு வித்தியாசமான டோனை கொடுத்து இருக்கிறது. பவானி ஷங்கர் கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து இருக்கிறார்.

படத்தில் துணை முதல்வராக இருக்கும் கவுதம் மேனன் தான் படத்தின் மெயின் வில்லனாக இருக்க வேண்டும். ஆனால், மெயின் வில்லனாகவும் சிம்புவே நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் படத்திலும் துணை வில்லனாகவே தான் கவுதம் மேனனைப் பார்க்க முடிகிறது. வழக்கம் போல சிம்புவின் அடியாட்களாக சிலர், துரோகிகளாக சிலர் வந்து போகிறார்கள்.

ஏஆர் ரஹ்மான் இசையில் சாயிஷா ஆடியுள்ள ‘ராவடி’ பாடல் திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது. மற்றபடி பாடல்கள் பெரிய அளவில் மனதில் பதியவில்லை. பின்னணி இசையில் காட்சிகளை ஏஆர் ரஹ்மான் தூக்கி நிறுத்துவது போலத் தெரிகிறது. ஆனால், நாம் பார்த்த தியேட்டரில் சவுண்ட் சிஸ்டம் சரியாக இல்லாத காரணத்தால் அதுவும் அதிரடியாக இல்லை.

திரைக்கதை அழுத்தமாகவும், விறுவிறுப்பாகவும் நகராதது ஒரு குறை. கிளைமாக்சில் குதிரை மீது வந்து கத்தியால் சண்டை போடாமல் துப்பாக்கியால் சண்டை போட்டு, பின்னர் கீழிறங்கியதும் கத்தியால் சண்டை போடுகிறார் சிலம்பரசன். சிம்புவைக் கொல்ல துப்பாக்கிகளுடன் நூற்றுக்கணக்கான பேர் வந்தாலும் தனியாளாக நின்று சமாளிக்கிறார். இன்னும் எத்தனை படங்களில்தான் இப்படி பார்ப்பது ?.


படத்தை முழுவதும் தாங்கிப்பிடிக்க சிம்பு ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார். ஆனால், அவரை ‘பாதி தல’ ஆக பாதிப் படத்தில் மட்டுமே காட்டுவதை நிச்சயம் மாற்றியிருக்க வேண்டும்.ஏ. ஆர். ரஹ்மான் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம். பலவீனம் என்று பார்த்தால், விக்ரம் படம் போலவே இடைவேளையில் சிம்புவை அறிமுக படுத்தி இருக்கிறார்கள். அது ஏதோ வலிந்து திணிக்கப்பட்டது போல இருக்கிறது. மற்ற படி படம் நன்றாகவே இருக்கிறது.


சிலம்பரசன் டிஆர் ஒரு கேங்ஸ்டர் ஏஜிஆராகக் காணப்படுவார், இது நிச்சயமாக நடிகருக்கு ஒரு சக்திவாய்ந்த பாத்திரமாக இருக்கும். சிம்பு பாதாள உலக கும்பல் வேடத்தில் நடிக்க, கவுதம் கார்த்திக் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். சில்லுனு ஒரு காதல் படத்திற்குப் பிறகு 15 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் மீண்டும் இணைவதையும் இந்தப் படம் குறிக்கிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்